Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

kamal in raja parvai

முததிலேயே சொல்லிவிடுகிரேன், நான் ஒரு தீவிர கமல் விசிறி. ஆனால் நீங்கள் நினைப்பது போல் அல்ல, கமல் எது செய்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள, ரஜினி ரசிக்கர்களைப் பொல. நல்லது,  இந்கு மற்றுமொறு ரஜினி, கமல் ரசிகர் சண்டையை ஆரம்பிப்பதல்ல எனது நோக்கம். ஏனேனில் மன்னிக்கவும், என்னைப் பொறுத்த வரையில் ரஜினியின் படங்களை நான் ஒரு போதும் உயர்வாக நினைத்ததில்லை, பாட்சா உட்பட. ஆனால், இங்கு ஒன்றை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். சிறு வயதில் பாட்சாவைப் பார்த்து சிலாகித்து இருக்கிறேன். ஆனால், நீங்கள் தரமான படங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு, உங்களின் ரசனை மாறி விடும்.  நான் அதற்காக, படங்களை காவியமக எடுக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. இப்பொழுதும்  சில MGR படங்களை விரும்பிப் பார்க்கிறேன். காரணம், அவை pure commercial படமாக இருந்தாலும், அரைத்த மாவையே அரைக்க வில்லை.

Title Song கிடையாது. இருப்பதிலேயே மிகக் கொடுமையான விசயம் Title songs தான்.  இது இருக்கும் படங்களை censor தடை செய்ய வேண்டும். கமலை நான் பெருமையாகப் பேசக் காரணம். தமிழ் cinemaவில் எனக்கு படித்த படங்களில் கமல் படங்கள்தான் பெரும்பாண்மை. நான் சொல்வது பத்து,பதினைந்து வருடங்களுக்கு முந்திய படங்களை.  இப்பபொழுது வரும் கமல் படங்கள் ரஜினி, விஜய் cinema மாக்களை விட ஒன்றும் சிறந்தல்ல.  இது தான் மிகவும் மிகவும் வருத்தப் பட வேண்டிய விசயம். அண்மையில் தான் ராஜ பார்வையையும், தசவராதம் படமும் பார்த்தேன்.  எவ்வளவு வித்தியாசம். என்னதான் தொழிழ்நுட்பம் வளர்ந்திருந்தாலும்,  இரண்டிலும் எது நல்ல படம் என்று சொல்லத் தேவையில்லை. இதற்குக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?.  நியாயமாகாப் பார்த்தால் கமல் இன்னும் நன்றாக எடுத்திருக்க வேண்டும், இப்போதிருக்கும் வசதிகளை வைத்து.

ஆனால் நடந்தது என்ன. கமலால் சுயமாக ஒரு நல்ல படத்தை தர முடியாதா. கமலின் நல்ல படங்கள் அனைத்தும் சிறப்பாக வரக் காரணம், நல்ல directorகள். கமலுக்கு இனி மேலும் பாலச்சந்தர் வந்து படம் எடுக்க மாட்டார். கமலுடைய cinema ஞாணத்திற்கு தசாவதாரம் போன்ற படங்கள் தேவையா.கமலுடைய கோபம் அல்லது பொறாமை சாதரணமாகப் பார்தால் நியாமாகத் தோன்றும். என்னதான் செய்தாலும் ரஜினியின் செல்வாக்கை பெற முடியவில்லையே என்கிற ஆத்திரம். இதற்காக தனது திறமையை வீணடித்துக் கொண்டிருப்பது, அவருக்கய மட்டுமல்ல, என்னைப் போன்ற தீவிர ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய துரோகம்.Ego சண்டைகளை விட்டு விட்டு சாதனை படைப்பதை மறந்து விட்டு , தரமான கதையுல்ல படத்தை தர வேண்டும. கமலைப் பார்த்து வந்தவர்கலெல்லாம் இப்பொது நல்ல படம் தரும் பொது, கமலும் முன்பைப் பொல நல்ல படங்களைத் தர முடியம். அது உலக cinema வாக இருக்கத் தேவையில்லை. நல்ல தமிழ்ப் படமாக இருந்தால் போதும். அவை ஒன்றும் வசூலில் சாதனை படைக்க வேண்டாம். ஆனால் வருங்கால tamil film makersக்கு ஒரு பாதயை காட்டிப் பொக வேண்டும். இல்லயென்றால் கமலுடய படத்திற்கும், விஜயின் படத்திற்கும் வித்தியாசம் இருக்காது.

சென்ற வாரம் சுப்பரமணியபுரம் பார்த்தேன், சாரு நிவேதிதாவின் விமர்சனத்தை படித்த பிறகு. அந்த படத்தில் இது வரை சொல்லாத, பார்காத விசயம் எதுவும் இல்லை. ஆனால் துவக்கம் முதல் இறுதி வரை கட்டிப் போடும் அனைத்தும் உண்டு அதில். ஆனால் வியாபார ரீதீயாக சாதனை படைக்கும் என்று சொல்ல முடியாது.  ஆனால் இது போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வந்தால் தான், தமிழ் ரசிகர்களின் ரசனை மாறும்.